Monday, June 14, 2010

ஒரு உயர்ந்த காதல் ...

எவ்வளவு நாளாக அவளை உங்களுக்கு தெரியும்?

நான் சுமார் இரண்டு வருடங்கள் மூன்று மாதங்களாக தினமும் அவளை பார்த்து வருகிறேன்.

அவளுடைய பெயர் என்ன?

நான் அவளுக்கு வைத்த பெயர் விண்டி (Windy)

அவள் என்ன கலர்?

நல்ல வெள்ளை நிறம்.

அவளை அருகிலிருந்து பார்த்ததுண்டா?

இல்லை அதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனது அலுவலகத்தின் நான்காவது மாடியில் இருந்து பார்த்தால் அவள் தெரிவாள்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்ப்பீர்கள்?

அவளை ஒரு நாள் கூட நான் பார்க்காமல்  இருந்ததில்லை. தினமும் அலுவலகம் நுழையும் முன்னும் பிறகு வீட்டிற்கு திரும்பும் முன்பும் கண்டிப்பாக அவளை பார்க்காமல் போனதில்லை. சில நேரங்களில் அவளை பார்க்க வேண்டும் போல் தோணும். உடனே ஓடி வந்து எட்டி பார்த்து விட்டு போய் விடுவேன்.

உங்கள் நண்பர்களுக்கு அவளை தெரியுமா?

ஓ... நான் எல்லோருக்கும் அவளை காண்பித்துள்ளேன். ஒன்று தெரியுமா? அவளை பார்த்த முதல் நாளிலுருந்து ஒவ்வொரு வருட முடிவிலும் நான் அவளுக்காக நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி வருகிறேன்.

இன்னும் எத்தனை நாட்கள் அவளை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணம்?

எனக்கு தெரியாது. இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்கள் ஏன் வருடங்கள் கூட பார்த்துக்கொண்டே இருக்கலாம்?

அவள் உங்களை விட்டு விலகி விடுவாள் என்று நினைக்கிறீர்களா?

தெரியவில்லை. ஒருவேளை இரண்டு வருடங்களுக்கு முன் அடித்தது போல் ஒரு மிக பெரிய காற்று அடித்தால் அவள் தற்போது தொங்கிக்கொண்டிருக்கும் மரத்திலிருந்து பறந்து போக வாய்ப்புண்டு.

காற்றடித்ததினால் பறந்து வந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிளாஸ்டிக் பையை இரண்டு  வருடங்களாக தொடர்ந்து பார்த்துக்கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு கேக் வெட்டி கொண்டாடும் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரியும். இது ஒரு மிக பெரிய கிறுக்கு தனம் என்று. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு அந்த பையின் மேல் ஏற்பட்டுவிட்டது.

நன்றி Kathy Fedrick அவர்களே. எங்கள் வானொலி நிலையத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்து உங்கள் (பை) காதல் கதையை பகிர்ந்து கொண்டதற்கு.

மேலும் விபரங்களுக்கு...

ஒண்ணும் இல்லங்க. அமெரிக்காவில் ஒரு FM வானொலியில் நேயரிடம் எடுக்கப்பட்ட பேட்டி இது. இதெல்லாம் அமெரிகாவில் சகஜமுங்க.
share on:facebook

Friday, June 11, 2010

இதுதாண்டா போலீஸ்...

நான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் (குறுகிய மற்றும் நீண்ட காலம் அங்கு தனியாகவும்/குடும்பத்துடன் வாழ்ந்தும் இருக்கிறேன்). அங்கு நான் கண்ட அதிசயங்களை! ஒரு பதிவாக போட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அமெரிக்காவை பற்றி பலர் தவறான கருத்தை கொண்டிருப்பது எனக்கு தெரியும். அதில் சில உண்மைகளும் உண்டு. என்னை பொறுத்தவரையில் உலகில் எல்லா இடத்திலும் நல்லதும் உண்டு, கெட்டதும்  உண்டு. நல்லவைகளை முதலில் பார்ப்போமே?

அதிசயம் - I.


1. போக்குவரத்து/வாகன ஓட்டும் முறைகள்:

உலகத்தில் எனக்கு தெரிந்து லஞ்சமே வாங்காத போலிஸ் என்றால் அது அமெரிக்காவில்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை யாராவது ஒருத்தர் அப்படி லஞ்சம் வாங்கினால் அது லட்சத்தில் ஒருவராக இருந்தாலே அது அதிசயம் தான். அதுபோல் இங்கு போக்குவரத்து/சட்டம் ஒழுங்கு என காவலர்களை பிரிப்பதில்லை. எல்லோருமே COPS தான். அவரே திருடனையும் பிடிப்பார். அவரே போக்குவரத்து பிரச்சனைகளையும் கையாள்வார்.  

2. வாகனம் ஓட்டுனர் உரிமை:

நம்ம ஊரில் பத்தாவது பாஸ் பண்ணுவது எப்படி முக்கியமோ அது போல் அமெரிக்காவில் 18  வயது ஆனவுடன் ஓட்டுனர் உரிமை (License) எடுப்பது என்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இங்கு யாரும் யாரையும் சார்ந்து (depend) ஆகி வாழ முடியாது. மாணவர்கள் பொதுவாக வெளி ஊர்/வெளி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் சேரும் போது அவர்களுக்கு கார் ஓட்ட தெரிவது  நிச்சயம் தேவையான ஒன்று.

3.Department of Motor vehicles(DMV = நம்மூர் RTO office):

அடுத்து   ஓட்டுனர் உரிமை (License)  பெறும் நடைமுறை. நம்மூர் போல் இங்கு காசு கொடுத்தால் RTO அலுவலகம் போகாமலே ஓட்டுனர் உரிமை பெற்று விட முடியாது. முறையாக ஓட்டுனர் பயிற்சி புத்தகத்தை (Driver's handbook) படிக்காமல் எழுத்து தேர்வு எழுத சென்றால் பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஓட்டியவர் கூட தோல்வி அடைய வாய்ப்புண்டு. முதலில் எழுத்து தேர்வில் தேர்வாகிவிட்டால் பின் வாகனம் ஓடும் தேர்வு (road test) நடைபெறும். இங்கும் முறையாக RTO பக்கத்தில் உட்கார்ந்து இருக்க அவர் எதிர்பார்ப்பதுபோல் முறையாகவும் பாதுகாப்பாகவும் வண்டியை ஒட்டி காண்பித்தால் மட்டுமே நீங்கள் தேர்வு பெற முடியும். இல்லையென்றால் நீங்கள் ஒபாமாவின் மகளாக இருந்தால் கூட வாழ்க்கையில் லைசென்சே எடுக்கமுடியாது.

4. சாலை விதிகள்:

சாலை விதிகளை கடைபிடிப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள உலகில் யாரும் இல்லை. இந்தியாவில் சைக்கிள் ஓட்ட தெரியாதவர்கள் கூட இங்கு கார் ஓட்ட முடியும். கார் ஓட்டுவது இங்கு அவ்வளவு எளிது. அதே சமயம் சாலை விதிகளை ஒருவர் கடை பிடிக்கவில்லை என்றாலும் மிகப்  பெரிய  விபத்துக்கள்  நடக்க  வாய்ப்புண்டு.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

நாலு ரோடுகள் சந்திக்கும் சாலையில் சிக்னல் இல்லையென்றால் நான்கு புறமும் STOP சைன் போர்டுகள் இருக்கும். யாராக இருந்தாலும் அந்த போர்டுக்கு முன்னாள் வாகனத்தை கண்டிப்பாக நிறுத்தி தான் பிறகு செல்ல வேண்டும். யார் முதலில் வந்தார்களோ (எந்த பக்கமாக இருந்தாலும்) அவர்கள் தான் (first come first go) முதலில் சாலையை கடக்கலாம். இரவு பன்னிரண்டு மணிக்கு ஆள் அரவமே இல்லையென்றாலும் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தான் பிறகு எடுப்பார்கள்.

5.  அவசர கால சேவை:

அடுத்து அவசர கால சேவை வண்டிகள்: இங்கு ambulance சேவை பாராட்டத்தக்க ஒன்று. நீங்கள் போனை எடுத்து அவசர அழைப்பு என்னை 911 அழுத்தினால் போதும். போன் மூலமாக 5 வயது சிறுவன் கூட அம்மாவுக்கு பிரசவம் பார்க்கும் அளவுக்கு அவனுக்கு உயிர் காக்கும் வழிமுறைகளை கூட கூறிக்கொண்டே அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கு முன் ஆம்புலன்சை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அதே போல் ஒரு ஆம்புலன்ஸ் ரோட்டில் சைரன் அடித்துக்கொண்டு போனால் யாராக இருந்தாலும் அதற்க்கு வழி விட வேண்டும். இல்லை என்றல் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும். நம்மூர் மாதிரி யானை கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட கோழிக்குஞ்சு போல மற்ற வாகனங்களிடம்
வழி கேட்டு கெஞ்சாது.

நல்லவைகள் தொடரும்...
share on:facebook