Saturday, August 25, 2012

பதிவர் மாநாடு12.27 PM update - சில சுவாரசியங்கள்...சில ஏமாற்றங்கள்...

பதிவர் மாநாட்டின் அறிமுக நிகழ்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டிருக்கிரார்கள். உண்மையிலேயே ஆவலாக கண்டு களித்துக் கொண்டிருக்கிறேன்.

பதிவரின் பெயர் யாரென்று சரியாக காதில் விழவில்லை. ஆனால் அவர் மிகவும் காமெடியாக பேசினார். திடீரென்று நான் இலக்கியத்திற்கு ஆற்றி வரும் தொண்டு மிக பெரியது என  கூறினார். என்னடா இது?  யார் இவர் என பார்த்தால். இறுதியில் இப்படி முடித்தார்.

'நான் கவிதைகள் ஏதும் என் 'பிளாக்கில்' எழுதுவதில்லை இப்போ சொல்லுங்கள், நான் இலக்கியத்திற்கு ஆற்றும் தொண்டு மிக பெரிது தானே என்று.

அடுத்து சிரிப்பு போலிஸ் பதிவரை அறிமுக படுத்த அழைத்தார்கள். நேரில் எப்படி இருப்பார் என பார்க்க ஆவலுடன் இருந்தேன். என்ன ஆயிற்று என  தெரியவில்லை நண்பருக்கு. மேடைக்கு வரவில்லை.

பல பதிவர்கள் மிகவும் சுருக்கமாக தங்க அறிமுகத்தை முடித்துக் கொண்டாலும், சில பதிவர்கள் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொண்டார்கள் அவர்களின் பதிவு பற்றியும், அவர்களை பற்றியும் நன்கு அறிமுகப்படுத்தினார்கள்

பதிவர்கள் பக்கம் கேமரா திரும்பிய போது  பதிவர்கள் முகங்களை காண முடிந்தது. அதிகமானோர் சற்று முதிய பதிவர்களாக கட்சி அளித்தார்கள். அதுவும் சற்று வருத்தம் தான்.

அடுத்த update சிறிது நேரம் கழித்து....






share on:facebook

4 comments:

ராஜ் said...

அவர் தான் சேட்டைகாரன் என்று நினைக்கிறன் ..

CS. Mohan Kumar said...

முன் வரிசையில் வயதில் மூத்தோரும் பின் வரிசையில் இளையோரும் இருந்தனர். மேலும் மூத்தோரை விருது வழங்கி கௌரவிப்பது நிகழ்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு

நீங்கள் பெயர் தெரியாது என குறிப்பிட்டவர் சேட்டைக்காரன்

இங்கு முதல் கமன்ட் போட்ட ராஜ் உங்களை பற்றி மிக விசாரித்தார். அவர் விரைவில் அமேரிக்கா செல்ல உள்ளார். அங்கு உங்களை சந்திக்கலாம் என நினைத்திருந்தார். நீங்கள் இந்தியா வந்து விட்ட விபரம் கூறினேன்

ஆதி மனிதன் said...

@ராஜ் said...
//அவர் தான் சேட்டைகாரன் என்று நினைக்கிறன் ..//

நன்றி ராஜ்.

ஆதி மனிதன் said...

@மோகன் குமார் said...
//முன் வரிசையில் வயதில் மூத்தோரும் பின் வரிசையில் இளையோரும் இருந்தனர். மேலும் மூத்தோரை விருது வழங்கி கௌரவிப்பது நிகழ்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு //

தகவலுக்கு நன்றி மோகன்.

//இங்கு முதல் கமன்ட் போட்ட ராஜ் உங்களை பற்றி மிக விசாரித்தார். அவர் விரைவில் அமேரிக்கா செல்ல உள்ளார். அங்கு உங்களை சந்திக்கலாம் என நினைத்திருந்தார். நீங்கள் இந்தியா வந்து விட்ட விபரம் கூறினேன்//

ஒ அப்படியா. அடுத்த முறை முடிந்தால் சந்திப்போம்.

Post a Comment